விருதுநகர் மாவட்டத்தில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம சுந்தரி(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் உதயகுமார் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபத்தில் உதயகுமார் தனது மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்கப்பதிந்த விருதுநகர் மேற்கு போலீசார் உதயகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகிளா நீதிமன்றம் உதயகுமாருக்கு ஆயுள் தண்டனையும், 7000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.