சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சர்மா நகர் 2-வது தெருவில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திக்(27) கொளத்தூர் அலுவலகத்தில் ஏஜென்டாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கார்த்திக் இருக்கும் சாலையோர கடையில் புரோட்டா வாங்கி வந்து குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து இரவு 11 மணிக்கு வாந்தி எடுத்து வாங்கி விழுந்த கார்த்திக்கை குடும்பத்தினர் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கார்த்திக் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கார்த்திக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் கார்த்திக் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.