சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பி.ஆர்.கே சர்மா தெருவில் கூலி வேலை பார்க்கும் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேஷுக்கு உறவுக்கார பெண் ஒருவருடன் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் குளிப்பழக்கம் இருந்ததால் அந்த பெண் ராஜேஷை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

கடந்த வாரம் அங்கிருந்து வீட்டிற்கு வந்த ராஜேஷ் மீண்டும் மது குடிக்க தொடங்கினார். பின்னர் மன உளைச்சலில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.