திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் இருந்து ஒரு கார் ஏலகிரி மலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் வளையம்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் காரில் வந்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.