திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் பரணிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலவையில் இருக்கிறது. இவருக்கு பிரதீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று பரணிதரனின் மனைவி வேலைக்கு சென்றார். அதன் பிறகு பரணிதரன் தனது பிள்ளைகளுடன் வீட்டில் இருந்தார்.

அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் பரணிதரனை அவரது பிள்ளைகள் கண் முன்னே அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பரணிதரணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது.