தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் அருகில் இருக்கும் திப்பணம்பட்டி கிராமத்தில் முப்புடாதி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டியின் கணவர் கிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்தார். இவரது மகன் திருமணம் ஆகி ஆவுடையானூர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

முப்புடாதி பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு அருகே மாட்டு சாணம் கொட்டும் பகுதியில் முப்பிடாதி இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டபோது மூதாட்டியின் உடலில் ஆடையின்றி முகம் மட்டும் சாணத்திற்குள் திணித்தபடி இருந்ததை பார்த்தனர். அவரது உடலை போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் திப்பனம்பட்டியை சேர்ந்த ராமர் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில் அவர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. மூதாட்டி கோபமடைந்த ஆவேசமாக திட்டியதால் அவரை கொலை செய்ததாக ராமன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.