ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே சிப்காட் செல்லும் ரோட்டில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சாம்செர் அலி என்பதும், அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சாம்செர் அலியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.