கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கப்பியறை சரல் விளை பனங்குழி பகுதியில் ஈஸ்வர பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீபன் என்ற மகன் உள்ளார். இவர் நாகர்கோவில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் மேரி ரோஷினியும் பிரதீபனும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு கருங்கல் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மேரி ரோஷினியை பிரதீபனுடன் அனுப்பி வைத்துள்ளனர்.