மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூரில் வாசு ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் நாமக்கல்லில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் வாசு ராஜாவும் சாணார்பட்டி பகுதியில் வசிக்கும் மாணவியும் காதலித்து வந்தனர். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வாசுராஜா மாணவியுடன் நெருக்கமாக பழகியுள்ளார்.

பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி கூறியதற்கு வாசுராஜா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வாசு ராஜாவை கைது செய்தனர்.