நாமக்கல் மாவட்டத்திலுள்ள சுங்கக்காரன்பட்டியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் 25-ஆம் தேதி ரேகா விறகு அடுப்பில் வெந்நீர் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது விறகு தீப்பிடிக்காததால் மண்ணெண்ணையை எடுத்து ஊற்றியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக ரேகாவின் சேலையில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த ரேகாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.