ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அல்லாளச்சேரி கிராமத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து பொருட்கள் விற்பனையாளராக இருக்கிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் சொந்தமாக மருந்தகம் வைக்க 10 லட்ச ரூபாய் வரதட்சணையாக வேண்டும் என லோகநாதன் தனது மனைவியிடம் கேட்டு சித்திரவதை செய்துள்ளார்.

தமிழரசி பணம் கொடுக்காததால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோபத்தில் லோகநாதன் பிரியா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து தமிழரசி ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் லோகநாதன், அவரது மாமா குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.