நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைப் பட்டியில் தென் திருவண்ணாமலை சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவனடியார்கள், நடராஜர் உள்ளிட்ட சிலைகள் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.

நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை காண ஏராளமான பக்தர்கள் வந்தனர். இந்நிலையில் சுமார் மூன்று அடி நீளமுள்ள பாம்பு கோவிலுக்குள் நுழைந்து சிவலிங்கத்தின் மீது ஏறி அமர்ந்ததை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். அதனை தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். சிறிது நேரம் கழித்து பாம்பு அங்கிருந்து சென்றது. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.