பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு இந்திரா நகரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் சிக்கியதால் வெங்கடேசனின் வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வெங்கடேசனின் மனைவி இறந்து விட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வெங்கடேசன் தனது குழந்தையை பார்த்து வந்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடேசன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.