புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காத்தான்விடுதியில் விவசாயியான கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து கருப்பையா மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.