ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி நடேச ரெட்டி தெருவில் பவானி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் குழந்தைகள் பராமரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பவானி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பவானியை தாக்கி நகை, பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தணிகைவேல் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.