ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இலவம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தீபலட்சுமி என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு பாடங்கள் சரியாக இல்லாமல் எழுதாமல் இருந்த ஏழாம் வகுப்பு மாணவ மாணவிகளை தீபலட்சுமி மரக்கட்டை ஸ்கேலால் சரமாரியாக அடித்ததாக தெரிகிறது. இதனால் 4 மாணவிகளின் இடது தோள்பட்டை, மணிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள் காயங்கள் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவிகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தார். அதன்படி வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி ஏழாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் காயமடைந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் மாணவிகளை அடித்து காயப்படுத்திய தீபலட்சுமியை வேலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.