சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டி மாரியம்மன் கோவிலில் கடந்த இரண்டாம் தேதி கம்பம் நடும் விழா நடைபெற்றது. கடந்த 13-ஆம் தேதி நைனாம்பட்டி, தானாகுட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கோவில் முன்பு நடனம் ஆடிய போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இதனால் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் 17 வயது சிறுவன், தரண்(20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.