சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்கிருந்து ரேஷன் அரிசி கடத்தியதாக லாரி டிரைவர் விக்டர் ஜேம்ஸ், அம்மாபேட்டையை சேர்ந்த சாதிக் பாட்ஷா, சுப்பிரமணியம், நடேசன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பலுடன் ரேஷன் கடையின் விற்பனையாளராக வேலை பார்க்கும் ஜெயந்திமாலா என்பவருக்கு தொடர்பு இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனால் ஜெயந்திமாலாவை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பள்ளப்பட்டி கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க துணை பதிவாளர் முத்து விஜயந்திமாலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்