புதுக்கோட்டை மாவட்டத்தில் 47 வயது மதிக்கத்தக்க நபர் அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிறார் இவர் தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை வெளியே சொல்ல கூடாது என அவர் தனது மகளை மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் தனது கணவர் மீது அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் அரசு ஊழியரை கைது செய்தனர் இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியருக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 1/2 லட்ச ரூபாய் அரசு தரப்பில் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.