புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பகுதியில் தெருநாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று காலை நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன், மருதேஷ் ஆகிய பள்ளி மாணவர்கள் குளத்திற்கு குளிக்க சென்றனர். அப்போது இரண்டு வெறி நாய்கள் மாணவர்கள் மீது பாய்ந்து கடித்து குதறியது. அவர்களை காப்பாற்ற முயன்ற பாலமுருகன் என்பவரையும் வெறிநாய் கடித்து குதறியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கறம்பக்குடியில் தெரு நாய்களின் தொந்தரவை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.