மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியில் செல்வராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி(70) என்ற மனைவி இருந்துள்ளார். இவரது பேரன் பீட்டர் டேனியல்(26) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 11-ஆம் தேதி ராஜேஸ்வரி தனது பேரனை பார்த்து நலம் விசாரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பாட்டிக்கும் பேரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த பீட்டர் டேனியல் வீட்டில் கிடந்த பாட்டிலை எடுத்து தனது பாட்டியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ராஜேஸ்வரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பீட்டர் டேனியலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.