வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க ஸ்டாலின் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதுகிறார். அந்த கடிதத்தில், திராவிட முன்னேற்ற கழகம் ஆறாவது முறையாக ஆட்சி செய்கின்ற வாய்ப்பினை வழங்கி, தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் நாள்தோறும் சாதனை திட்டங்களை சிறப்பாக நடத்தி வருகிறது நம்முடைய திராவிட மாடல் அரசு என்றும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் பின்பற்றக் கூடிய வகையில் நம்முடைய அரசு திட்டங்கள் இருக்கின்றனர்.
குறிப்பாக இந்தியாவில் பன்முகத்தன்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரான மதவாத கொள்கை கொண்ட ஆட்சி அமைத்துள்ளது. இதனை வீழ்த்த இந்தியா கூட்டணி உருவாக்கி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் இத்தகைய பங்காவானது மகத்துவமானது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முழுமையாக வெற்றியை இந்தியா கூட்டணி வெற்றி பெற 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். எனவே கடுமையான உழைப்பை கொடுக்க வேண்டும் என்றும், தற்போது தொண்டர்களுக்கு அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.
மேலும் வருகின்ற நாடாளுமன்ற தொகுதி 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்றும், அதேபோல ஒவ்வொரு பூத்து கமிட்டி கூட்டம் மாநாடுகள் போல நடைபெறுகின்ற… மண்டல வாரியாக நடைபெறுகிறது… அதில் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொண்டர்களை களத்தில் பணியாற்றி நாம் வெற்றி பெற வேண்டும் என்றும் அந்த மடலில் குறிப்பிட்டுள்ளார்.