ஈரோடு மாவட்டத்தில் உள்ள கைகாளான் குட்டை பகுதியில் செல்லப்பாண்டி-சத்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரித்திகா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி சத்யா குளிப்பதற்காக வீட்டிற்கு வெளியே பாத்திரத்தில் வெந்நீர் போட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விளையாடிக் கொண்டிருந்த ரித்திகா வெந்நீரை எடுக்க முயன்றார்.

அப்போது வெந்நீர் கொட்டி ரித்திகா வலியில் அலறி துடித்தார். உடனடியாக ரித்திகாவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று ரித்திகா பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.