திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள என்.எஸ் நகர் ராஜ காளியம்மன் நகரில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆந்திராவில் தங்கி பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். கடந்த ஆண்டு திண்டுக்கல்லுக்கு வந்த தினேஷால் தமிழ் சரளமாக பேச இயலவில்லை. இதனால் நண்பர்களிடம் பழக முடியவில்லை என மன உளைச்சலில் இருந்த தினேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தினேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தினேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.