புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மழையூர் ஆயிப்பட்டியில் கிராமிய பாடகரான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் கணேசனின் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் மோளுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிரான்விடுதியைச் சேர்ந்த தேவா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் இணைந்து பிரகாஷை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி உள்ளனர்.

இதனால் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த 4 பேரும் பிரகாஷையும் கபிலனையும் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் நான்கு பேர் மீது போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.