விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆமத்தூரில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வடமலாபுரம் கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பள்ளி முடிந்து ராஜலட்சுமி இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் ராஜலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ராஜலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.