விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் கங்கம்மாள்(80) என்பவர் வசித்து வந்துள்ளார். உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட கங்கம்மாள் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் மூதாட்டியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்நிலையில் பெரியகண்மாயில் இறந்த நிலையில் கங்கம்மாள் பிணமாக மிதந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.