விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லாங்கிணறு அண்ணா நகரில் சுப்புராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வ லட்சுமி என்ற மனைவி உள்ளார். சுப்புராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற தெய்வ லட்சுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் சுப்புராஜ் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து சுப்புராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தெய்வ லட்சுமியை தேடி வருகின்றனர்.