விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு குடியிருப்பு சேர்வை என்பவர் வசித்து வருகிறார். இவரது 16 வயதுடைய மகன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியாடைந்த குடும்பத்தினர் மாணவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து மாணவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவரை தேடி வருகின்றனர்.