விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி. அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வரும் ராஜலட்சுமி பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விருதுநகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்து சிவகாசி சாலையில் குமாரலிங்கபுரம் பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் இருவர் வந்துள்ளனர்.

அவர்கள் திடீரென ராஜலட்சுமி அருகே வந்து அவர் கழுத்தில் போட்டிருந்த செயினை பதித்துள்ளனர். அப்போது ராஜலட்சுமி கடுமையாக போராடியும் அவரது ஒன்றரை பவுன் நகையுடன் அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து ஆமத்தூர் காவல் நிலையத்தில் ராஜலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.