கடலூர் மாவட்டம் எஸ்.புதூர் பகுதியை சேர்ந்தவர் அருள். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிப்பால் அவதி அடைந்து வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அருள் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் அருளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த முதுநகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.