திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சேர்ந்தவர்கள் திவான் – மீரான் பீவி தம்பதி. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் தானிஷ்அகமத் என்ற மகன் இருந்தார். இந்த தம்பதி தனது மகனுடன் விருதுநகர் மாவட்டத்திற்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்றுள்ளனர். அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவிற்காக மூவரும் நடந்து சென்று கொண்டிருந்தபோது தவறான வழியில் வேகமாக வந்த மினிபஸ் ஒன்று இவர்கள் மீது மோதியுள்ளது.

இதில் சிறுவன் தானிஷ்அகமத் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் மீரான் பீவி மற்றும் அங்கிருந்த சில பெண்கள் இந்த விபத்தில் காயமடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு மினி பஸ் ஓட்டுநரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.