ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்துள்ளார். நகர்மன்ற தலைவர் கார்மேகம் முன்னிலையில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவ முகாமில் குழந்தைகள் நலம், தோல் சிகிச்சை, பொது மருத்துவம், பல் மருத்துவம், மகளிர் நலம் போன்ற அனைத்து வகையான சிகிச்சைகளும் கொடுக்கப்பட்டது.

இந்த முகாமில் பரிசோதனைக்கு உட்பட்டவர்களுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் அவர்களுக்கு அதற்குரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் மருத்துவர் ரத்தினகுமார் வட்டாட்சியர் ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.