கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி பகுதியில் ஐ.டி ஊழியரான பரத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் உடன் வேலை பார்க்கும் 26 வயது இளம்பெண்ணுக்கும் இடையே வழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த ஒரு வருடமாக தாலி கட்டாமல் இருவரும் கணவன் மனைவி போல சேர்ந்து வாழ்ந்தனர். இதனால் இளம்பெண் 4 முறை கர்ப்பமானார். பின்னர் பரத் கூறியதின் பேரில் கருக்கலைப்பும் செய்துள்ளார்.

இந்நிலையில் தொழிலை விரிவுபடுத்த பரத் இளம்பெண்ணிடம் அடிக்கடி பணம் வாங்கியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து இளம்பெண் பரத்தின் தாய் சாந்தியை சந்தித்து தனக்கு பரத்தை திருமணம் செய்து வைக்குமாறு தெரிவித்தார். அதற்கு இரண்டு பேருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் 10 லட்ச ரூபாய் தர வேண்டும்.

அப்படி பணம் கொடுக்கவில்லை என்றால் எனது மகளுக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்பேன் என கூறி சாந்தி மிரட்டியதாக தெரிகிறது. இதற்கு பரத்தும், அவரது உறவினர்களும் உடந்தையாக இருந்தனர். இதுகுறித்து இளம்பெண் கோவை மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பரத், அவரது தாய் சாந்தி, உறவினர்கள் ராணி, அருண், தினகரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.