திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முரளி ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து முரளி சென்னையிலிருந்து திருத்தணி நோக்கி செல்லும் புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்தார். இந்நிலையில் வேப்பம்பட்டு- செவ்வாய்பேட்டை ரயில் நிலையம் இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது முரளி படிக்கட்டில் நின்று வெளியே எட்டிப் பார்த்ததாக தெரிகிறது.

அப்போது தண்டவாளம் அருகே இருந்த மின் கம்பத்தில் முரளியின் தலை ப்பட்டது. இதனால் கீழே விழுந்து படுகாயமடைந்த முரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று முரளியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.