கடலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது பெற்றோருடன் மேல்மருவத்தூருக்கு சென்றார். அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாரி என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியிடம் தனது செல்போன் எண்ணை கொடுத்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்த சிறுமி மாரியிடம் செல்போனில் பேசி வந்தார்.

சம்பவம் நடைபெற்ற அன்று மாரி சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மாரி சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் மாரியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.