கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செல்ல குட்டப்பட்டி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மகளும், அஜித் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் உறவினர் வீட்டு விசேஷ நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக ராஜா அஜித் உறவினர் நாகமணி ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். இந்நிலையில் கொன்றம்பட்டி காளியம்மன் கோவில் மேடு அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின்புற டயர் பஞ்சரானது.

இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து மூன்று பேரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் அஜித், நாகமணி ஆகியோர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.