திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ராக்கியாபாளையம் பிரிவு அருகே தனியார் மண்டபம் அமைந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி அந்த மண்டபத்தில் விசேஷ நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விசேஷத்திற்கு சமையல் செய்வதற்காக கரூரைச் சேர்ந்த பிரகாஷ் நாமக்கல்லை சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆகியோர் சென்றனர். அப்போது நள்ளிரவு குடிபோதையில் மண்டபத்திற்கு வந்த வாலிபர் சமையல் செய்ய வந்தவர்களிடம் தகராறு செய்தார்.

அப்போது வாக்குவாதம் முற்றி கைகாலமாக மாறியது. இதில் கோபமடைந்த சுந்தரமூர்த்தியும் பிரகாதும் இணைந்து வாலிபரை தாக்கி கீழே தள்ளினர். இதனால் படுகாயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த போலீசார் அங்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.