மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர்- கோவில்பட்டி நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து அந்த வழியாக வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் குணசேகர், பேருந்து கண்டக்டர் தாஸ், விமலா மேரி, சாந்தி உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த எட்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.