கடலூர் மாவட்டத்தில் உள்ள வால்காரமேடு கிராமத்தில் முதலை நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு சுமார் 8 அடி நீளமும், 90 கிலோ எடையுடைய முதலையை பிடித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் முதலையை வக்காரமாரி நீர் தேக்கத்திற்கு கொண்டு சென்று விட்டனர்.