திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் விழுப்புரத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான முருகையன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மேல்மலையனூருக்கு சென்று விட்டு அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

இந்நிலையில் கோவில் துறையூர் அருகே சென்றபோது பின்னால் வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். முருகையாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.