திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் சதீஷ் என்பவர் நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த இரண்டு பேர் சதீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இதனையடுத்து அவர்கள் திடீரென பெட்ரோலை சதீஷ் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் வலியில் அலறி துடித்தபடி சதீஷ் அங்குமிங்கும் ஓடினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சதீஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சதீஷ் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இரண்டு பேர் சதீஷை கொலை செய்தது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.