திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம் காலணியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சதீஷ்குமாரை வழிமறித்தனர். அவர்கள் சதீஷ்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சதீஷ்குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.