புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின்  மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி,  தேர்தல் வரும்போது சிலரை   கொலைகளுக்காக எதிர்க்க வேண்டிய நேரம் வந்துருது. அப்போது தேர்தல் என்று வரும்போது நமக்கு எதிரா அந்த தொகுதியில இவர் இந்த ஜாதிக்கு எதிரா செயல்படுபவர் ? இவர் இந்த ஜாதிக்கு எதிரானவர் என்று பேசுவதற்கு….

பிரச்சாரத்துக்கு கண்டவன் கிட்ட காசு வாங்கிட்டு கிளம்பிடுறாங்க… இனிமேல் நீ அந்த ஆயுதத்தை எடுத்தினா… அதே  ஆயுதத்தை  நாங்களும் எடுக்க வேண்டிய தேவை வரும்….  நீ பேசிட்டு வர உன் சாதிக்கார எல்லா ஊருக்கும் வருவான்.  அவன் திமுகவோ,  அண்ணா திமுகவோ,  பாஜகவோ,  காங்கிரஸ்ன்னு  திடீர்னு மாத்திக்கிட்டு அவன் புண்ணியவான் ஆகிட மாட்டான்… நீ எங்களுக்கு எதிரா…. எங்களுக்கு மட்டும் ஜாதி முத்திரை…. அவங்களுக்கெல்லாம் திமுக, பாஜக,  தேசியவாதமாயிடுவானா ?

அதெல்லாம் கிடையாது…  நீ எங்களுக்கு எதிராக பண்ணினா…… உங்க சமுதாய வேட்பாளரை  எந்த ஊரிலும் விடமாட்டோம். அதுவும் எங்க எதிர்ப்பை பற்றி உங்களுக்கு நல்லாவே தெரியும்… ஒத்தாலா எல்லாம் வந்து  இருக்க மாட்டோம்…  ஒட்டுமொத்த ஊரோடு அடிச்சு ஓட விட்டுருவோம். நாங்கள் யாருக்கும் பகைக்கு போவது கிடையாது… நாங்கள் தமிழர் ஒற்றுமை என்று பேசுகிறோம்…. தேசியம் என்று பேசுகிறோம்…..  என தெரிவித்தார்.