தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதே சமயம் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது இரவு 7 மணி வரை சென்னை, திருவள்ளூர் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது