தேனி மாவட்டத்தில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் போடி, பெரியகுளம், தேவதானப்பட்டி ஆகிய பகுதிகளில் காலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் குரங்கணி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அணை பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. எனவே பாதுகாப்பு கருதி பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல கும்பக்கரை அருவிக்கு செல்ல வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர்.