விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் பிரதோஷம், அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். நாளை மற்றும் டிசம்பர் 26-ஆம் தேதி கோவிலில் பௌர்ணமி வழிபாடு பூஜைகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் டிசம்பர் 24-ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே டிசம்பர் 10, 12 ஆகிய தேதிகள் அம்மாவாசைக்கு கோவிலுக்கு வர இருந்த பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.