திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊத்தான்பட்டியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பேச்சிகுட்டி தனியாருக்கு சொந்தமான மக்காச்சோள கதிர் அறுவடை செய்யும் டிராக்டருடன் கூடிய எந்திர ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பூரில் வசிக்கும் ராஜேஸ்வரி என்பவருக்கும் சொந்தமான தோட்டத்தில் மக்காச்சோள கதிர் அரவை பணியில் பேச்சிகுட்டி ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எந்திரத்தில் மக்காச்சோளம் தட்டுகள் சிக்கி கொண்டதால் பேச்சிகுட்டி அதனை எடுக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பேச்சிகுட்டியின் கை எந்திரத்தில் சிக்கி அவரை உள்ளே இழுத்து விட்டது. இதனால் கை, கால்கள் துண்டாகி சம்பவ இடத்திலேயே பேச்சிகுட்டி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று பேச்சிகுட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.