தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழன் மாளிகையில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜயகுமாரின் கார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முன்விரோதம் காரணமாக யாராவது தீ வைத்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.