சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே இருக்கும் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமச்சந்திரன் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் கட்டாயப்படுத்தி ராமச்சந்திரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராமச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.